தோட்டத் தொழிலாளர்களுக்கு கோதுமை மா நிவாரணம்: அமைச்சரவை அங்கீகாரம்

Date:

தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை சலுகை விலையில் வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 115,867 தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்த சலுகை நிவாரணம் கிடைக்கப்பெறவுள்ளது.

‘பொதுமக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளை குறைப்பதற்கான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துதல்’ என்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் குழும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் வழங்குதல் தொடர்பான யோசனை வர்த்தக அமைச்சரின் தலைமையிலான குழு கவனத்தில் கொண்டு பரிந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளது.

இந்தப் பரிந்துரைகளின் பிரகாரம் அடையாளங் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோகிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்காக வர்த்தக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்கள் சவூதியில் அடக்கம்

சவூதி பேருந்து விபத்தில் உயிரிழந்தோா் உடல்களை சவூதியில் அடக்கம் செய்ய முடிவு...

நிலச்சரிவு காரணமாக மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு காரணமாக...

பெரும்பாலான இடங்களில் பி.ப. 1.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (18) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, தென் மாகாணங்களில்...

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...