பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு 20% அபராதம்!

Date:

நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 20% த்தை அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்மானித்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி நன்னடத்தை விதி 2. 22 இன் பிரகாரம், வழங்கப்பட்ட நேரத்தினுள் ஓவர்களை வீச தவறியதற்காக, தாமதிக்கப்பட்ட ஓவர்களுக்காகவும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...