பயங்கரவாதத் தடைச் சட்டம்: தற்காலிக விதிகளின் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் தாக்கல்!

Date:

பயங்கரவாதத் தடைச் சட்டம் (தற்காலிக ஏற்பாடுகள்) வெளியுறவு அமைச்சரால் திருத்தங்களுக்காக நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேவையான குழுக்களை நியமித்துள்ளார் மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தேவையான ஏற்பாடுகளை திருத்துமாறு குழுக்களின் அறிக்கைகளின்படி நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பரில், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பினை வழங்கும் விதியை அறிமுகப்படுத்துவது உட்பட பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் பல மாற்றங்களை  முன்மொழிகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம்; இன்றுமுதல் இலகுவான நடைமுறை

ஒரு முன்னோடித் திட்டமாக புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி...

இலங்கையில் பார்வையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான சவூதியின் ‘நூர் தன்னார்வத் திட்டம்’ எம்பிலிப்பிட்டியாவில்!

சவூதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகளை அடிப்பையாகக் கொண்டும்...