மஸ்கெலியா- சாமிமலை பகுதியில் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து வேன் விபத்து!

Date:

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த 5 பேர்படு காயங்களுக்குள்ளாகி டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கோட்டேகொட பகுதியிலிருந்து சிவனொளிபாதமலை யாத்திரைகளை மேற்கொண்டு, மீண்டும் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தபோதே வேன் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

மாத்தறை கோட்டேகொட பகுதிகளை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். வேனில் 12 பேர் பயணித்துள்ளதாகவும் இதில் சாரதி உட்பட 5 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதோடு ஏனையோர் சிறு காயங்களுடன் தப்பியுள்ளனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தொடரும் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை இன்று (15) முதல்...

நாடு முழுவதும் மழை பெய்யக்கூடும்

இலங்கைக்கு அருகிலுள்ள தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக நாடு...

இன்றைய நாணய மாற்று விகிதம்!

இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி...

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் FOUR A’S ADVERTISING FESTIVAL

இலங்கையின் ஆக்கப்பூர்வமான தொடர்பாடல் துறையை மாற்றியமைக்கும் வகையில் Four A’s Advertising...