மின்சார கட்டணத்தை செலுத்தாத பாவணையாளர்களுக்கு அதற்கான மேலதிக கட்டணத்தை அறவிடுதல் அல்லது அவர்களுக்கான மின்விநியோகத்தை துண்டிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான உத்தரவு விரைவில் வெளியிடப்படும் என பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் மூன்று மாத காலத்திற்குள் மின்சாரக் கட்டண நிலுவைகைளை செலுத்த தவறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காலத்திற்குள் கட்டணங்களை செலுத்த தவறினால் அவ்வாறானோரிடமிருந்து கூடுதல் தொகை அறவீடு செய்யுமாறு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
இலங்கையில் மின்சார பயனர்களினால், சுமார் ஐயாயிரம் கோடி ரூபா கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மின்சார சபைக்கு 4400 கோடி ரூபாவும், இலங்கை மின்சார தனியார் நிறுவனத்திற்கு 600 கோடி ரூபாவும் கட்டண நிலுவை செலுத்தப்பட உள்ளதாகவும் மாதாந்த மின் கட்டணத்தை 30 நாட்களுக்குள் அறவீடு செய்து கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.