“ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை”-ஜோ பைடன்!

Date:

ரஷ்யாவின் படைகளில் ஒரு பகுதி உக்ரைன் எல்லையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட போதும் போருக்கான சாத்தியம் நீங்கிவிடவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை ரஷ்யா உக்ரைன் மற்றும் பெலாரசை சுற்றிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுடன் நேரடியாக மோத விரும்பவில்லை என்ற போதும் அமெரிக்கர்கள் தாக்கப்பட்டால் அதற்கான கடும் விளைவுகளை ரஷ்யா சந்திக்க நேரிடும் என்றும் பைடன் எச்சரித்துள்ளார்.

போர் மூண்டால் சர்வதேச அளவில் ரஷ்யா கடும் கண்டனத்தை சந்திக்க நேரிடும் என்றும் பெரும் பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் பாதிப்பு அமெரிக்காவிலும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு போன்றவற்றில் எதிரொலிக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...