ஹிஜாப் தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை!

Date:

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் தொடர்பான வழக்கின் விசாரணை நாளையதினம் (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.

நாளைய விசாரணையைப் பொறுத்தே கல்லூரிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

பத்தாம் வகுப்பு வரையிலான பாடசாலைகள் நாளை திறக்கப்படுகின்றன. எனினும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு 16ஆம் திகதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே, கல்லூரிகள் திறப்பது குறித்து நீதிமன்றத்தின் கருத்தை அறிந்த பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று பொம்மை தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வருவதற்கு ஆதரவாகவும் எதிராகவும் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு இறுதித்தீர்ப்பு வரும் வரை கல்லூரிகளுக்கு மதரீதியான ஆடைகளை அணிந்து வருவதற்கு இடைக்காலத் தடை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை: காலம் காலமாக அரசாங்கம் மாறினாலும் பௌத்த மக்களின் உரிமை மாறாது: ஞானசார தேரர்.

திருகோணமலையில் வலுத்துள்ள புத்தர் சிலை சர்ச்சைக்கு மத்தியில் கலகொட அத்தே ஞானசார...

புதிய வவுச்சர் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான காலணிகள்!

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு, பாதணிகளை பெற்றுக்கொள்வதற்காக கல்வி அமைச்சினால்...

கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி!

கிராமிய பாலங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அரச அபிவிருத்தி மற்றும் நிர்மாணத்...

ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான வன்முறை சம்பவங்களில் இருவர் பலி

பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மரண தண்டனை தீர்ப்புக்கு எதிரான...