ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூரில் இன்று ஆரம்பமானது.பரபரப்பாக நடைபெற்ற ஏலத்தில் யாரும் சற்று எதிர்பார்க்காத நிலையில் இஷான் கிஷான் அதிக விலைக்கு ஏலம் போனார். மும்பை, குஜராத், ஐதராபாத் அணி இவரை ஏலம் எடுப்பதில் கடும் போட்டியாக இருந்தது.
இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது. இதுவரை நடந்த ஏலத்தில் இஷான் கிஷான்தான் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரராக பதிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல் ஏலத்தில் இதுவரை அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இந்திய வீரர்களில் இஷான் கிஷான் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் யுவராஜ் சிங் உள்ளமை குறிப்பிடத்தக்கது.