PSL Update: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் அணி கைப்பற்றியது!

Date:

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதி போட்டி லாஹுரில் நேற்று (27) முல்தான் சுல்தான் மற்றும் லாஹுர் காலாண்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இப் போட்டியில் லாஹுர் அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லாஹுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அதிகபட்சமாக முகம்மத் ஹபீஸ் 69(46) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

181 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சுல்தான் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.அணியின் தலைவர் முகம்மத் ரிஸ்வான் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் காலாண்டர்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.அணியின் தலைவர் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...