PSL Update: பாகிஸ்தான் சூப்பர் லீக் கிண்ணத்தை ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் அணி கைப்பற்றியது!

Date:

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் இறுதி போட்டி லாஹுரில் நேற்று (27) முல்தான் சுல்தான் மற்றும் லாஹுர் காலாண்டர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்றது.இப் போட்டியில் லாஹுர் அணி 42 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய லாஹுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.அதிகபட்சமாக முகம்மத் ஹபீஸ் 69(46) ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

181 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சுல்தான் அணி 19.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.அணியின் தலைவர் முகம்மத் ரிஸ்வான் 14 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

இதன் மூலம் ஷஹீன் அப்ரிடி தலைமையிலான லாஹுர் காலாண்டர்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை கைப்பற்றியது.அணியின் தலைவர் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...