இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டி-20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 183 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்ப்பில் துடுப்பாட்டத்தில் பெத்தும் நிஸ்ஷங்க 75 ஓட்டங்களையும், தசுன் ஷானக ஆட்டமிழக்காமல் 47 ஓட்டங்களையும் மற்றும் தனுஷ்க குணதிலக 38 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.184 என்ற வெற்றியில் கற்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.
இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்ரேயாஷ் ஐய்யர் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும் ரவீச்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 45 ஓட்டங்களையும் மற்றும் சஞ்சு சம்சுன் 39 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
இலங்கை அணியின் பந்து வீச்சில் லஹிரு குமார 2 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.அதனடிப்படையில் 2 -0 என்ற ரீதியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.