இந்திய உயர்ஸ்தானிகரோடு விமல் கலந்துரையாடல்!

Date:

கைத்தொழில் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இலங்கை இந்தியாவுடன் கலந்துரையாடியுள்ளது.

அந்த வகையில், கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையில் இந்த நேற்றைதினம், கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி, தொழில் துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இரு அதிகாரிகளுக்கும் இடையே ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன.

உற்பத்தி போன்ற இலங்கைக்கான முன்னுரிமைப் பகுதிகளுக்கு இந்த கலந்துரையாடலில் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.

அண்மைக்காலமாக இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் வகிபாகம் குறித்து அமைச்சர் விமல் வீரவன்ச முக்கிய விமர்சகராக இருந்த போதிலும் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சீட் பெல்ட் விதிக்கு மேலும் 3 மாத கால அவகாசம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் அனைத்து பயணியர் இருக்கைகளிலும் இருக்கைப் பட்டி...

சலேவின் இடைக்கால மனு விசாரணை ஒத்திவைப்பு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலே தனது கைது...

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும்...