உக்ரைன்-ரஷ்யா போர் Updates;சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுப்போம்-பைடன் அதிரடி!

Date:

ரஷ்யா மீது பொருளாதார தடைகளை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் சர்வதேச சந்தையில் ரஷ்யாவின் செயல்பாடுகளைத் தடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த பையன்,போரை ரஷ்யா தான் முதலில் ஆரம்பித்ததாகவும் அதற்கான விளைவுகளை புடின் சந்தித்தே தீர வேண்டும் என்றார்.

உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்பப் போவதில்லை என்றும் அதேநேரம் நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்றார். சைபர் தாக்குதல் நடத்த ரஷ்யா முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு பதிலடி கொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் இனி பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் இல்லை என்றார்.

உக்ரைன், ரஷ்யா விவகாரத்தில் இந்தியா யார் பக்கம் இருக்கிறது என கலந்தாலோசித்து வருவதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகள் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்ய தொழில் நிறுவனங்கள் நான்கு முக்கிய வங்கிகளின் சொத்துக்கள் முடக்கப்படுவதாக பைடன் கூறியுள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...