உக்ரைன்-ரஷ்யா போர் நெருக்கடி: நிதானமாக செயற்படுமாறு இலங்கை அறிக்கை

Date:

உக்ரைனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் போர் பதற்ற நிலைகள் குறித்து இலங்கை அரசாங்கம் மிகுந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வெளிவிவகார அமைச்சு, அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் இலங்கை கேட்டுக்கொள்கிறது.

பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, யுத்தத்தை உடனடியாக நிறுத்துவதற்கு உழைக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இராஜதந்திரம் மற்றும் நேர்மையான உரையாடல் மூலம் நெருக்கடியை தீர்க்க சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்த முயற்சிகளின் அவசியத்தை இலங்கை வலியுறுத்துவதாக அமைச்சு மேலும் கூறியது.

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்தம் இலங்கைக்கும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவியதன் பின்னர் இலங்கையில் சுற்றுலாத் துறை மீள் எழுச்சி பெற்று வருகின்றது.

ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளே அதிகளவில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்கின்றனர்.

அதேவேளை ரஷ்யா மற்றும் உக்ரேன் ஆகிய நாடுகளும் இலங்கையின் தேயிலை ஏற்றுமதியின் இரண்டு பிரதான வாடிக்கையாளர்களாகும்.

இவ்வாறான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்த போர் கடுமையாக தாக்கத்தை ஏற்படுத்தும் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...