உள்நாட்டு மருந்து உற்பத்தி தொடர்பில் அமைச்சரவை தீர்மானம்!

Date:

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், சத்திரசிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூட நுகர்வுபொருட்களை கொள்வனவு செய்வதற்கு வெளிப்படையான மற்றும் வினைத்திறன் மிக்க வழிமுறையை அறிமுகப்படுத்தும் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.

அதற்கமைய அனைத்து மருந்துப் பொருட்கள், அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ ஆய்வக நுகர்பொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தியை ஊக்குவிப்பதே அதன் கொள்கையாகும், அவை சர்வதேச தரத்திற்கு ஏற்ப உள்நாட்டில் தயாரிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்படி பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், எதிர்காலத்தில் மேற்படி முறையின் பிரகாரம் உள்ளுர் உற்பத்திகளை கொள்வனவு செய்வதற்கும் வெளிப்படையான மற்றும் வினைத்திறனான வழிமுறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...