ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் விட்டின் மீது இனந்தெரியாத குழுவினரால் தாக்குதல்

Date:

இன்று அதிகாலை 2.10 அளவில் பிலியந்தலை கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்கு பிரவேசித்த நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம தெரிவித்தார்.

வெள்ளை சிற்றூர்ந்தொன்றில் வந்த குழுவினர், குடியிருப்பின் பிரதான நுழைவாயிலை பலவந்தமாக திறந்து, அங்கிருந்தா பாதுகாப்பு உத்தியோகத்தரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக நேரில் கண்ட சாட்சியத்தின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

தாக்குதல் நடத்தியவர்கள் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கியதாக சமுதித்த சமரவிக்ரம மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பல தடவைகள் துப்பாக்கிச் சத்தங்களும் கேட்டதாக அவர் கூறினார்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் உடனடியாக அறிவிக்கப்பட்டதாகவும், அதன் பிரகாரம் காவல்துறையினர் வந்து வீட்டுத் திட்டத்தைச் சூழவுள்ள பகுதிகளில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த தாக்குதல் தொடர்பான சீ.சி.ரீ.வி காணொளிகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...

சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்...

காசா வரலாற்றில் மிகப்பெரிய இறுதி ஊர்வலம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 112 பேரின் உடல்கள் நாளை அடக்கம்!

பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே மிகப்பெரிய மற்றும் சோகமான இறுதி ஊர்வலத்திற்கு நாளை...