ஒமிக்ரோன் பரவலுக்குப் பின் 5 லட்சம் பேர் பலி; ஆய்வில் தகவல்!

Date:

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய  ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, கொவிட்டினால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 லட்சமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மற்ற கொவிட் தொற்றுகளை விட, பாதிப்புக் குறைவாக இருப்பதாகக் கருதப்படும் ஒமிக்ரோன் வைரஸ் கண்டறியப்பட்ட பிறகு உலகளவில் கொவிட் பாதிப்பு கடுமையாக அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், ஒமிக்ரோன் கண்டறியப்பட்ட பிறகு, உலகளவில் 5 லட்சம் பேர் கொவிட்டுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் பேர் பலியாகியுள்ளனர்.

அதுபோல, ஒமிக்ரோன் பரவத் தொடங்கிய பிறகு, உலகளவில் 13 கோடிப் பேருக்கு கொவிட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதகாவும், 75 வயதுக்கு மேற்பட்டவர்கள், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இணை நோய் இருந்தவர்களுக்குத்தான் ஒமிக்ரோன் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வெனிசுலா விவகாரம்: அமெரிக்க தலையீட்டுக்கு எதிராக கொழும்பில் இன்று போராட்டம்

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டைக் கண்டித்து, முன்னணி சோசலிசக் கட்சி இன்று (05)...

வெனிசுலா ஜனாதிபதியை சிறை பிடித்தது ஒரு மோசமான முன்னுதாரணமாகும்:மு.தமிமுன் அன்சாரி

அமெரிக்காவின் அதிரடி நடவடிக்கையால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வெனிசுலா ஜனாதிபதி நிக்கலஸ் மடூரோ...

2026 ஆம் கல்வியாண்டின் முதல் தவணை இன்று ஆரம்பம்!

2026 ஆம் ஆண்டுக்கான முதல் தவணையின் முதல் கட்டம் இன்று (05)...

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான பலத்த மழை

கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை தற்போது நாட்டின் தென்கிழக்குப்...