‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, முக்கிய அமைச்சுக்களுடன் சந்திப்பு!

Date:

ஒரே நாடு – ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி நீதி அமைச்சர் அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஆகியோரை கடந்த சில தினங்களில் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது குறித்த செயலணியின் கடந்தகால மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் தொடர்பாக இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

மேலும் இதன்போது நீதித்துறையில் நீதி நிர்வாகத்தை விரைவுபடுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள எண்மானமயமாக்கல் வேலைத்திட்டம், புதிய நீதிக்கட்டமைப்பு, நீதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள புதிய சட்டமூலங்கள் தொடர்பான தகவல்களை நீதி அமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி செயலணியிடம் கையளித்தார் என்றும் ஜனாதிபதி பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, அமைச்சர் ஜீ.எல்.பீரிஸினால் அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கைகள் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கம் கலந்துகொள்ளவுள்ள சர்வதேச மாநாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, பிரிவினைவாதம் தோற்கடிக்கப்பட்டு, ஒருநாடாக இலங்கை ஒன்றிணைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு ஏதேனும் காரணிகள் தோன்றுமாயின் அவற்றை முறியடிப்பதன் முக்கியத்துவம்பற்றி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செயலணிக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், செயலணிக்கு கிடைத்த பொதுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் தொடர்பான முன்மொழிவுகள் குறித்து அமைச்சர் சரத் வீரசேகரவிடம் விளக்கமளிக்கப்பட்டது.

இலங்கை ஒற்றையாட்சி நாடு என்பதாலேயே “ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற தேவை ஏற்படுவதாக தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நாட்டில் ஒரே சட்டம் கொண்டு வரப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலணியை நியமித்தார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர், இலங்கையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற கருத்தினை அமுல்படுத்துவது தொடர்பில் பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் கருத்துக்களையும் ஆராய்ந்து பிரேரணைகளுடன் கூடிய கருத்துருவை சமர்பிக்கவுள்ளார்.

ஜனாதிபதி செயலணியானது தற்போது இலங்கையின் பல்வேறு பகுதிகளை உள்ளடக்கிய பொது ஆலோசனைகளை நடாத்தி கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...