பந்து வீச அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு 20% அபராதம்!

Date:

நேற்றைய போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசுவதற்கு, அதிக நேரத்தை எடுத்துக்கொண்டமைக்காக இலங்கை அணிக்கு மொத்த போட்டி கட்டணத்தில் 20% த்தை அபராதம் விதிக்க சர்வதேச கிரிக்கெட் பேரவையின் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூன் தீர்மானித்துள்ளார்.

நேற்றைய ஆட்டம் முடிவடையும் போது இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட ஒரு ஓவர் பின்தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என டேவிட் பூன் தெரிவித்துள்ளார்.

வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஐசிசி நன்னடத்தை விதி 2. 22 இன் பிரகாரம், வழங்கப்பட்ட நேரத்தினுள் ஓவர்களை வீச தவறியதற்காக, தாமதிக்கப்பட்ட ஓவர்களுக்காகவும் அவர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...