பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Date:

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது 2022 ஆம் ஆண்டுக்கான அறிக்கைத் திட்டத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக ஒழிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இம்மாத முற்பகுதியில் இராஜதந்திரிகளுக்கான மாநாட்டின் போது, பயங்கரவாதத்திற்கான புதிய வரையறையுடன் பயங்கரவாதக் குற்றமும் தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும் என்று ஆணைக்குழு நம்புவதாகக் வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், பயங்கரவாதத்தை நாட்டின் பொதுச் சட்டத்தின் கீழ் தேவையான திருத்தங்களுடன் விசாரிக்க வேண்டும் என்று ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், பயங்கரவாதக் குற்றத்திற்கான சான்றுகள் கட்டளைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை விலக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் ஆதரிக்கிறது.

Popular

More like this
Related

அடுத்த 24 மணி நேரத்திற்கான வானிலை முன்னறிவிப்பு

இந்தியப் பெருங்கடலில் உருவாகியுள்ள டெல்டா அழுத்த தாழ்வு மண்டலம்வேகமாக நெருங்கி வருவதாக...

ஜனவரி 01 முதல் பிரிட்டனுக்கான இலங்கை ஆடை ஏற்றுமதிக்கு வரிச் சலுகை

பிரித்தானியாவின் வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ், இலங்கையின்...

சொஹாரா புஹாரியின் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பதவி இரத்து!

கொழும்பு மாநகர சபை உறுப்பினரான சொஹாரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்...

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு

உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 6 இலட்சம் பெண்கள் கர்ப்பப்பை வாய்...