ரஷ்யா உக்ரைன் இடையே போர் மூளும் சூழல்; வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டும் இளைஞர்கள்!

Date:

ரஷ்யாவுடன் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் உக்ரைன் இளைஞர்கள் அந் நாட்டு வீரர்களுக்காக பதுங்கு குழிகளை தோண்டி வருகின்றனர். அந் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மரியுபொல் பகுதி இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் இணைந்து ரஷ்யப் படைகளை தங்கள் நாட்டு வீரர்கள் எதிர்கொள்ள ஏதுவாக பதுங்கு குழிகளை தோண்டும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது குறித்து தெரிவித்த மைகைலோ என்ற சிறுவன், ரஷ்யா தாக்குதல் நடத்தும் அச்சுறுத்தல் உள்ளதால் இரவில் உறக்கமின்றி தவிப்பதாகவும்,தங்கள் வீரர்களுக்கு உதவ முடிவு செய்து இந்தப் பணியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும் ராணுவ வீரர்களுக்கு உதவுவது தங்களது பொறுப்பாகும் என்றும் அச் சிறுவன் கூறியுள்ளார்.பதுங்கு குழிகளை வலுப்படுத்தும் பணிகள் 40க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த உத்தரவு

அம்புலுவாவ மலையில் அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு...

தாழமுக்கம் திருகோணமலைக்கு 100 கி.மீ. தொலைவில்:50-60 கி.மீ வேகத்தில் மிகப்பலத்த காற்று

இலங்கைக்குத் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடலில் உருவான ஆழ்ந்த தாழமுக்கம் தொடர்பில்...