விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானவை: உயர்நீதிமன்றம்

Date:

விசேட பண்டங்கள் மற்றும் சேவை வரி சட்டமூலம் 2/3 பெரும்பான்மையுடன் மற்றும் பொதுவாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என இலங்கை உச்ச நீதிமன்றம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளது.

இன்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வினை தொடங்கி வைத்து உரையாற்றும் போதே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனத் தெரிவித்து உயர்நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் அதனை நிறைவேற்ற வேண்டுமாயின், பாராளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பினாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆகவே விசேட பண்டங்கள் மற்றும் சேவைகள் வரி சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் எனில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை, சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...