‘அரசாங்கத்தை கவிழ்க்கும் நேரம் இதுவல்ல, நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதே முக்கியம்’ : ரணில்

Date:

இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால் கிரீஸ் நாட்டைப் போன்ற நிலைமைக்கு வழிவகுக்கும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அதேநேரம், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கும் நேரம் இதுவல்ல, மாறாக நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

2007-2008 நிதி நெருக்கடிக்குப் பிறகு கிரீஸ் நாடு கடன் நெருக்கடியை எதிர்கொண்டது. இது தொடர்ச்சியான திடீர் சீர்திருத்தங்கள் மற்றும் சிக்கன நடவடிக்கைகள் மூலம் மக்களை சென்றடைந்தது.

இந்த நிலைமையானது வறுமை மற்றும் வருமானம் மற்றும் சொத்து இழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுத்தது.

மேலும், கிரீஸ் நாடாக இலங்கை மாறக்கூடும் என சுட்டிக்காட்டிய ரணில் விக்கிரமசிங்க, இலங்கையை காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றார்.

‘பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கு ஒன்றுபட்ட முயற்சி தேவை என்றும் தற்போதைய சூழ்நிலையில் தேசிய அரசாங்கம் இயங்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...

கோபா குழுவின் தலைவர் பதவி கபீர் ஹாசிமுக்கு..!

பாராளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவின் (கோபா) (COPA) தலைவர் பதவிக்கு கபீர்...

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...