இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, டாக்டர் ஜெய்சங்கர் இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு தீவு நாடுகளின் நண்பர்களான அப்துல்லா ஷாஹித் மற்றும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் மார்ச் 26 முதல் 30 வரை இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு விஜயம் செய்கிறார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...