இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து மத்திய வங்கி ஆளுநருடன் ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடல்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் ஆகியோர் அடங்கிய குழு இன்றைய தினம் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை சந்தித்துள்ளது.

அதற்கமைய அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில், இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 8 முக்கிய விடயங்களை முன்மொழிந்ததாகவும், அதற்கு இன்றுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்றும் ஹர்ஷ டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொருளாதார சுமையை குறைக்க பொருளாதார குழு பல திட்டங்களை முன்வைத்துள்ளதாகவும், அதில் ஒன்று சர்வதேச நாணய நிதியத்தை அணுகுவது என்றும் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

‘அவசர கடன் நிலைத்தன்மை பகுப்பாய்வை நாங்கள் முன்மொழிந்தோம் மற்றும் இலங்கை கடனை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தை ஈடுபடுத்த நாங்கள் முன்மொழிந்தோம். தொற்றுநோய்-தடுப்புக்காலத்தை தீவிரமாக பரிசீலிக்குமாறு அவர்களிடம் கூறினோம், வங்கிகளும் வணிகங்களும் அதை எப்படி சமாளிக்கும். சில உதவிகளை பரிசீலிக்க வேண்டும்,’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...

நிதியமைச்சு செயலாளரின் இல்லத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியத்த மக்கள்

அக்குரேகொடவில் உள்ள நிதியமைச்சின் செயலாளர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை  ஆர்ப்பாட்டம்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச இஸ்லாமிய ஒற்றுமை மாநாடு: இலங்கை மலாயர் சமூகம் குறித்து டி.கே. அசூர் உரை!

மலேசியாவின் தெரெங்கானு மாநில அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட "5-வது சர்வதேச உம்மா...