இளைஞர்களின் வேலைவாய்ப்பு தொடர்பில் கலந்துரையாட நாமல் ராஜபக்ஷ கட்டார் நாட்டுக்கு விஜயம்!

Date:

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நேற்று கட்டார் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இதன்போது, சர்வதேச கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அப்துல் அஸீஸ் அல் அன்சாரியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

கத்தாரில் 300,000 வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு இலங்கை உத்தேசித்துள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த நடவடிக்கை இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நிவர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாட்டு வருவாயையும் அதிகரிக்கும் என்றார்.

இதன்போது, அமைச்சர் ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சு, பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரும் சென்றிருந்தனர்.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...