‘எரிசக்தி உற்பத்தியில் தமது நாடு விசேட கவனம் செலுத்தும்’:சவூதி வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் உறுதி

Date:

பல துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ள சவூதி அரேபியாவிற்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவுதிடம் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, தொழில்நுட்பம் அடிப்படையிலான அபிவிருத்தி மற்றும் கொழும்பு துறைமுக நகரம் ஆகிய துறைகளில் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகளை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

மேலும், இலங்கையின் பொருளாதாரத்தில் கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுத்திய தாக்கம் குறித்து சவூதி இளவரசர் அல் சவுதிடம் விளக்கமளிக்கப்பட்டது.

அதேநேரம், குறைந்த பணப்பரிமாற்றம், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி, வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கம் மற்றும் எரிபொருளுக்கான தேவை அதிகரிப்பு போன்றவற்றின் தாக்கத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமது நாடும் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், இத்துறையில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் சவூதி வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

பல துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் ஜனாதிபதி மற்றும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடினர்.

இதேவேளை இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் பின் ஹுசைன் அல்-ஹார்த்தி, சவூதி வெளிவிவகார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அப்துல்ரஹ்மான் அர்கான் அல்தாவூத், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...

தற்காலிகமாக செயலிழந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம்!

பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சின் இணையத்தளத்தைப் பயன்படுத்துவது...