எரிபொருள் பற்றாக்குறையால் 8 மின் உற்பத்தி நிலையங்கள் இடைநிறுத்தம்!

Date:

நாட்டுக்கு மின்சாரம் வழங்கும் பத்து (10) மின் உற்பத்தி நிலையங்களில் எட்டு உற்பத்தி நிலையங்களை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக தேசிய மின்கட்டமைப்புக்கு சுமார் 424 மெகாவாட் மின்சாரம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது சபுகஸ்கந்த அனல்மின் நிலையம் மற்றும் சோஜிட்ஸ் மின் உற்பத்தி நிலையத்தின் A மற்றும் B பிரிவுகள் மாத்திரமே செயற்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு இன்றைய தினம் எரிபொருளை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளதாகவும் இன்று மின்சாரம் தயாரிக்க போதுமானது என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...