கல்பிட்டியில் எரிபொருளை வீணடிக்கும் செயலான சைக்கிள் மற்றும் வாகன பேரணி – தொடர்பாக பதிலளித்த நாமல்!

Date:

NEWSNOW |- கொழும்பு – புத்தளம் வீதியில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – வாகன பேரணியின் பின்னணியில் தாம் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மறுத்துள்ளார்.

“இன்று கல்பிட்டியில் நடைபெற்ற சைக்கிள் – வாகன பேரணிக்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களால் எந்த உதவியும் செய்யப்படவில்லை. விளையாட்டு அமைச்சுடன் தொடர்பில்லாத தனியார் நிறுவனத்தினால் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாரின் அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியானது, நாட்டின் நிலைமைய கருத்தில் கொள்ளாமல், அபாயகரமான வாகனங்களை ஓட்டியதாகவும், எரிபொருளை வீணடிப்பதாகவும் குற்றம் சுமத்தி பொதுமக்களின் பல எதிர்ப்புகளை எதிர்கொண்டது.

மேலும் இது ஒரு தொண்டு நிறுவனத்தின் நன்கொடையின் ஒரு பகுதியாக இந்த பேரணியை ஏற்பாடு செய்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...

வடக்கு, கிழக்கு, வடமத்தியில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (21) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை...