சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதற்காக விசேட குழு நியமனம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கையாள்வதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...