சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இலங்கைக்கான முதலாவது விஜயத்தை மேற்கொண்டுள்ளார்!

Date:

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஆல் சவூத் இன்றைய தினம் அதிகாலை 1.20 மணியளவில் இலங்கை வந்துள்ளார்.

சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சரின் இருதரப்பு மட்டத்தில் மேற்கொள்ளப்படும் இலங்கைக்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இளவரசர் பைசலை இலங்கையின் நீதி அமைச்சர் அலி சப்ரி, இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் அல் ஹார்த்தி மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராச்சியத்தின் ஊழியர்கள் பலர் வரவேற்றனர்.

இதனிடையே இலங்கையில் நிலவும் எரிபொருள், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடன் ஜனாதிபதி கலந்துரையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

அவருடன் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் 18 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எண்ணெய் வளம் மிக்க தேசத்தின் வெளியுறவு அமைச்சர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு (14) பின்னர் நேபாளம் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...