ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்: ஜனாதிபதியை வெளியே வருமாறு கோஷம்!

Date:

ஜனாதிபதி செயலகத்தை முற்றுகையிட்டு ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ்க்கை செலவு அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி போன்றவற்றை சுட்டிக்காட்டியும் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் இடம்பெற்றுவருகின்றது.

எதிர்க்கட்சியால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட மக்கள் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தை அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வெளியே வருமாறு அழைப்பதுடன், ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைவதற்கான பலத்த முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Popular

More like this
Related

பேருவளையில் நடைபெற்ற ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா

ஸீரா மாநாடு மற்றும் நூல் வெளியீட்டு விழா பேருவளை ZIMICH மண்டபத்தில்...

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....