ஜே.வி.பி ஆர்ப்பாட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக ஜனாதிபதி செயலகத்திற்குள் நுழைந்தனர்!

Date:

மக்கள் விடுதலை முன்னணியில் (ஜே.வி.பி) இணைந்த சோசலிச இளைஞர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்திற்குள் வலுக்கட்டாயமாக பிரவேசித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்கள் ஜனாதிபதி செயலக வளாகத்துக்குள் நுழைய விடாமல், விசேட அதிரடிப்படையினர் தடுத்துள்ளனர்.

திருகோணமலை எண்ணெய் தாங்கி ஆலையை விற்பனை செய்வதற்கும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை விற்பனை செய்வதற்கும் எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெக்னிக்கல் சந்தியிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஆர்ப்பாட்ட பேரணியை ஆரம்பித்தது.

ஜனாதிபதி வரும் வரை போராட்டக்காரர்கள் வளாகத்திலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஜே.வி.பி கட்சி மூன்று தினங்களுக்கு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.

இதேவேளை , எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி புதன்கிழமையன்று நுகேகொடையில் பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது.

இறுதிப் போராட்டம் விவசாயிகளால் எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொலன்னறுவையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: அனல் பறந்த பிரசாரம் நிறைவு! நாளை வாக்குப் பதிவு!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள...

அஸ்வெசும நலன்புரித் திட்ட ஏப்ரல் மாத கொடுப்பனவுகள் இன்று வங்கிக் கணக்குகளில்

அஸ்வெசும (Aswesuma) நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ஏப்ரல் மாதத்திற்கான கொடுப்பனவு இன்றைய...

பல மாகாணங்களில் அதிக வெப்பம்!

நாளை (22) பகல் வேளையில் பல மாகாணங்களில் மனித உடலுக்கு உணரப்படும்...

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...