‘டீசலுக்காக மக்கள் வரிசையில் நிற்க வேண்டாம்’: பெற்றோலிய கூட்டுதாபனம் கோரிக்கை

Date:

இன்றும் நாளையதினமும் (மார்ச் 31) டீசல் போதுமானளவு கையிருப்பில் இல்லாததனால் எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதன் தலைவர் சுமித் விஜேசிங்கவின் கூற்றுப்படி, நேற்று (மார்ச் 29) மாலை திட்டமிடப்பட்டிருந்த 37,500 மெற்றிக் தொன் டீசல் ஏற்றுமதிக்கான இறக்கும் பணி திட்டமிட்டபடி நடைபெறவில்லை.

எவ்வாறாயினும், அத்தியாவசிய சேவைகளுக்கான டீசல் விநியோகம் தடையின்றி தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பெட்ரோல் விநியோகம் வழமைப் போன்று எவ்வித தட்டுப்பாடும் இன்றி தொடரும் என அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.

எனினும். எரிபொருள் நிலையங்களில் அதிகமான மக்கள் வரிசைகளில் நிற்பதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் எரிபொருள் விரைவாக முடிந்து விடுவதாகவும் வாகன சாரதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...