பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார்.

நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி அனைவருக்கும் நீதி வழங்கும் போராட்டம் நேற்று காலி மற்றும் மாத்தறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் வாழும் போது, இதுபோன்ற நிகழ்வுகளின் செய்திகள், எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஒரு நாள் இந்த சவால்களை முறியடிப்போம் என்ற நம்பிக்கையை அளித்தன என ஹிஜாஸ்புல்லா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் யையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை

வங்கி அட்டைகள் மூலம் பஸ் கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை...

அல்குர்ஆன் மனனப் போட்டி – 2025: மேல் மாகாணத்துக்கான போட்டி கொழும்பில்..!

முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் (DMRCA) சவூதி அரேபியா தூதரகமும் இணைந்து...

நுகேகொட பகுதியில் சிறப்பு போக்குவரத்து திட்டம் அமுல்.

நுகேகொட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இடம்பெற உள்ள பொதுக் கூட்டம்...

நுகேகொட பேரணி : ஒலி அமைப்புக்களின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தல்

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் இன்று...