பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் கையெழுத்து போராட்டத்தில் இணைந்தார் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா !

Date:

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான கையெழுத்து போராட்டத்தில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கையெழுத்திட்டுள்ளார்.

நேற்றையதினம், மாத்தறையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான நாடு தழுவிய கையொப்ப பிரச்சாரத்தில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில், ஹிஸ்புல்லாவுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கக் கோரி அனைவருக்கும் நீதி வழங்கும் போராட்டம் நேற்று காலி மற்றும் மாத்தறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை சிறைச்சாலைகளுக்குப் பின்னால் வாழும் போது, இதுபோன்ற நிகழ்வுகளின் செய்திகள், எனது குடும்பத்திற்கும் எனக்கும் ஒரு நாள் இந்த சவால்களை முறியடிப்போம் என்ற நம்பிக்கையை அளித்தன என ஹிஜாஸ்புல்லா தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்பு கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் யையெழுத்துப் போராட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...

போட்டி முடிவின் பின் “Free palestine ” T Shairt ஐ காட்டி ஆதரவு வெளியிட்டதற்காக இலங்கை கால்பந்து வீரர் தில்ஹாமுக்கு $2000 அபராதம்!

போட்டி முடிவடைந்த பின்னரான வெற்றிக் கொண்டாட்டத்தின் போது பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சுலோகத்தைக்...

இலங்கை மீதான அமெரிக்காவின் வரிக்குறைப்பு தொடர்பில் பாராளுமன்றில் ஜனாதிபதி விளக்கம்

இலங்கை மீது விதிக்கப்பட்ட வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 20%...