புத்தசாசன அமைச்சினால் புத்தளத்தில், போதைப்பொருள் புனர்வாழ்வு விழிப்புணர்வு கருத்தரங்கு!

Date:

புத்தசாசன அமைச்சின் கீழ் புத்தளம் பெந்தகோஸ்து தேவாலயத்தில் போதைப்பொருள் புனர்வாழ்வு பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கொன்று இடம்பெற்றது.

இக்கருத்தரங்கு திங்களன்று புத்தசாசன அமைச்சினால் போதைப்பொருள் புனர்வாழ்வு பிரிவின் பொறுப்பதிகாரியின் கீழ் நடைபெற்றது.

இதன்போது குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்களும் சகல மதங்களையும் சார்ந்த முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

போதைப்பொருள் ஒழிப்பில் சமய நிறுவனங்கின் பங்களிப்பு மிக முக்கியமாக இருப்பதால் சமயத் தலைவர்களுக்கு இது தொடர்பான விரிவான விளக்கமும் போதை ஒழிப்பு சம்பந்தமான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டன.

சமயத் தலைவர்களான, புத்தியாகம ரதன ஹிமி, அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம், அஷ்ஷெய்க் அப்துல் முஜீப், சிவஸ்ரீ வெங்கடராம குருக்கள், ஆகியோர் இந்த நிகழ்வில் கருத்துரைகளை வழங்கினார்கள்
இதேவேளை கருத்தரங்கு நிகழ்வில் வரவேற்புரையை பெந்தகோஸ்து தேவாலய பிரதான மதகுரு ரத்ன மலர் சகோதரி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் வெளியீட்டு விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...