இலங்கை பங்களாதேஷிடம் கடன் கோரிக்கை: முதலாவது கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய காலம் நீட்டிப்பு

Date:

பங்களாதேஷிடம் இருந்து மேலதிக நிதியுதவிக்கான கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஊடகங்களிடம் பேசிய போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, நாணய மாற்றமாக மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை கோரியுள்ளது.

இது முன்னைய பங்களாதேஷ் வழங்கிய 250 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் கூடுதலாகும். அதேநேரம் முந்தைய கடனை திருப்பிச் செலுத்தும் காலம் பங்களாதேஷ் வங்கியால் நீட்டிக்கப்பட்டதாக நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கை மற்றொரு கடனுக்கான சமீபத்திய கோரிக்கை தற்போது பரிசீலனையில் உள்ளது என்று பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அப்துல் மொமன் மேலும் கூறினார்.

மேலும் பங்களாதேஷ் நிலைமையைக் கண்காணித்து வருவதாகக் கூறிய அவர், நிலைமை எவ்வாறு உருவாகும் என்பதையும் அவர்கள் மதிப்பீடு செய்து வருவதாகவும், நிலைமையைப் பொறுத்து இலங்கையின் கோரிக்கை குறித்து முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...