புத்தாண்டு தினத்திற்குள் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு: எரிசக்தி அமைச்சர் உறுதி

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு ஏப்ரல் புத்தாண்டு தினம் நிறைவடைவதற்குள் தீர்க்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே மீண்டும் பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

நிகர்வொன்றில் பங்குபற்றி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறை முடிவுக்கு வந்தவுடன், அரசாங்கம் மீண்டும் கச்சா எண்ணெய் இறக்குதி செய்யத் நடவடிக்கை எடுக்கப்படும் என்வும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது, 215,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளில் அமைச்சிடம் இருப்பதாகக் கூறிய அவர், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட இது போதுமானது என்றார்.

இதேவேளை, இந்த வாரத்தில் மேலும் இரண்டு டீசல் ஏற்றுமதிகள் நாட்டிற்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அமைச்சர் உறுதியளித்த போதிலும், நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.

Popular

More like this
Related

நாட்டின் பல மாகாணங்களுக்கு கடும் வெப்பம் குறித்த எச்சரிக்கை

நாளை (21) நாட்டின் பல மாகாணங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின்...

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 441 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு ஏப்ரல் 10 முதல் 18 ஆம்...

புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

இலங்கைக்காக நியமிக்கப்பட்டுள்ள நான்கு புதிய தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர்ஸ்தானிகர்கள் இன்று...

அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச் சீட்டுக்கள் வழங்காத பஸ்களை முறையிட 1955 தொலைபேசி இலக்கம்

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை விட அதிக கட்டணத்தை அறவிடும் மற்றும் பயணச்...