பெட்ரோலிய களஞ்சியப் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நியமனம்!

Date:

இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன களஞ்சியசாலை பிரிவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற ஜெனரல் எம்.ஆர். டபிள்யூ.டி. சொய்சா நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் தலைவர் நாலக பெரேரா தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யூ. டி சொய்சா, காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னைய தலைவராக இருந்தார்.

இதேவேளை, நீடித்து வரும் எரிபொருள் நெருக்கடி நாளையுடன் முடிவுக்கு வரும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நம்புகின்றார்.

தற்போது இரண்டு கப்பல்களில் இருந்து மொத்தம் 65,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இறக்கப்பட்டுள்ளது, மற்றுமொரு எண்ணெய் தாங்கி இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...