மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பேரழிவு ஏற்படும்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ள அணு ஆயுதங்கள்!

Date:

மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் அணு ஆயுதங்களால் பேரழிவு ஏற்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதால் தீவிரமைடைந்து வரும் நிலையில் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனை சுற்று வளைத்து ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்துவதால் அதிகளவான பேரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது.

நாட்டைப் பாதுகாக்க உக்ரைன் படையினர் கடுமையாக போராடி வருவதுடன் தமது நாட்டுக்குள் நுழைந்த 6000 ரஷ்ய படையினரை கொன்றுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு படைதரப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலைமையில் உக்ரைனுக்கு நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்க முன்வந்துள்ளன.

இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்கப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

எனினும் மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் பெரும் பாதிப்பு ஏற்படும் மூன்றாம் உலகப் போரில் அணு ஆயுதற்களே அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நகரங்களை பிடிக்க ரஷ்யா தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் இப்போது எல்லையில் அணு ஆயுதங்களையும் ரஷியா குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய உக்ரைன் எல்லையில் 1588 அணு ஆயுதங்கள் குவித்துள்ளதுடன் கைவசம் உள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 4369 ஆகும். அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் தரை வழி தாக்குதலுக்கு 812 ஏவுகணைகள் தயாராகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...