‘ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்க எந்த தீர்மானமும் இல்லை’: பொதுஜன பெரமுன!

Date:

ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குவதற்கான எவ்வித திட்டமும் இல்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் தற்போது அந்த பதவியை வகிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் பதவி மற்றும் தேசிய அரசாங்கம் தொடர்பில் வெளியாகும் தகவல்கள் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஸ்ரீP லங்கா பொதுஜன பெரமுன தெளிவுபடுத்திய போதே அவர் இதனை கூறினார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரதமர் பதவியை வழங்குமளவிற்கு தமது கட்சியில் எவருக்கும் மூளையில் கோளாறு கிடையாது என நினைப்பதாக கூறியுள்ளார்.

நேற்றையதினம் சிங்கள நாளிதழ் ஒன்றில் பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கவிருப்பதாக வெளியான செய்தியினையடுத்து இந்த செய்தி சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...