அரசாங்கத்திற்கு எதிரான குற்றப்பத்திரிகை விரைவில்: விமல் வீரவன்ச

Date:

அரசாங்கத்தின் தற்போதைய பொறுப்பற்ற வேலைத்திட்டங்கள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை விரைவில் நாட்டுக்கு சமர்ப்பிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இந்த குற்றப்பத்திரிகையை அவரது கட்சி மற்றும் 11 நட்பு கட்சிகள் தாக்கல் செய்துள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் 11 கட்சிகளின் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, அரசாங்கத்தின் தற்போதைய நெருக்கடி வேலைத்திட்டத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விமல் வீரவன்ச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் அமைச்சர் டியூ குணசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர், நாடாளுமன்ற உறுப்பினர் திரன் அலஸ், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா, பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கவிந்து குமாரதுங்க, பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

ஃபேஸ்புக்கில் AI போலி வீடியோக்கள்: பிரதமரின் வீடியோக்கள் 12 ,லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதால் அதிர்ச்சி!

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான...

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு புதிய CEO நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் பொறியியல் பிரிவின் தலைவராகப் பணியாற்றி வந்த விபுல்...

பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதில் மதத் தலைவர்களின் பங்கு: ஜெத்தாவில் சர்வதேச கருத்தரங்கம் தொடக்கம்!

ஜெத்தாவில் உள்ள இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) தலைமையகத்தில், "பெண்களுக்கு எதிரான...

அஸ்வெசும நிதி மோசடி: 6 ஆசிரியர்கள், மாவட்ட செயலக அதிகாரி பணிநீக்கம்!

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற 2 கோடி ரூபாய்க்கும் அதிக அஸ்வெசும...