அரசாங்கம் விரைவில் 113 என்ற பெரும்பான்மை ஆசனங்களை இழக்கும்: 11 கட்சிகளின் பிரதிநிதிகள்!

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் கூட்டணி பங்காளிகளாக இருந்த போதிலும், 11 கட்சிகள் அண்மையில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டு, அரசாங்கம் அனுபவித்து வரும் பாராளுமன்ற பெரும்பான்மையை கூட்டாக விரைவில் பறிப்போம் என்று கூறியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேசிய சுதந்திர முன்னணி ((NFF), பிவித்துரு ஹெல உறுமய (PHU), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)) உள்ளிட்ட 11 கட்சிகளின் பிரதிநிதிகளால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கட்சிகள் நேற்றைய தினம் கண்டிக்கு பயணம் மேற்கொண்டு மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகாநாயக்கர்களை சந்தித்தனர்.

அங்கு 11 கட்சித் தரப்பினரின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மகாநாயக்கர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதன்போது, ‘எங்கள் 11 கட்சிகளுக்கு 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். அந்த 30 பேர் நீக்கப்பட்டால், அரசுக்கு 124 இடங்கள் மட்டுமே மிச்சமாகும்.

மேலும் 12 எம்.பி.க்கள் அரசாங்கத்தில் இருந்து விலகியவுடன், அது பாராளுமன்ற பெரும்பான்மையை இழக்கும். இந்த அரசாங்கம் செய்யும் பைத்தியக்காரத்தனமான செயல்களால், 12 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக உதய கம்மன்பில கூட்டத்தின் போது மகாநாயக்கர்களிடம் கூறினார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இந்த சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மையை பறிப்பது கடினம் அல்ல.

‘எல்லாக் கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று கூட்டப்பட்டது,

ஆனால் பசில் ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரை (தற்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) எதிர்க்கட்சி எம்.பி. ரணிலைப் பற்றிக் குறிப்பிடும் அளவுக்குத் தான் திமிர் பிடித்திருப்பதாகக் காட்டியுள்ளார்.

அங்கும் மோதலை உருவாக்க நினைக்கிறார். இப்படிப்பட்ட திமிர் பிடித்த, ‘அசிங்கமான அமெரிக்கனை’ கொண்டு இந்த நாடு முன்னேற முடியாது. இந்த அரசாங்கத்தின் பெரும்பான்மையான 113 இடங்களை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவோம், அதன் மூலம் இந்த ஆணவ ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், ‘என்று அவர் கூறினார்.

மேற்படி சர்வகட்சி மாநாட்டின் போது நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் தயாரித்த அறிக்கை தொடர்பாக விக்கிரமசிங்க எழுப்பிய கேள்விக்கு பின்னர், விக்கிரமசிங்கவிற்கும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் காரசாரமான விவாதம் வெடித்தது.

‘எதிர்காலத்தில் எந்த ராஜபக்சவையும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பிரசாரம் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

அப்படி ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றுகிறோம் என்று யாராவது சொன்னால், அவர்கள் எங்கள் திட்டத்தைப் பார்த்து பயந்துதான் இருக்கிறார்கள் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை நேசிப்பதால் பதவிகளை பற்றி சிந்திக்காமல் அரசியலில் ஈடுபட்டுள்ளோம். இந்த நாடு இன்னொரு நாட்டின் காலனியாக மாறுவதை அனுமதிக்க முடியாது.

மேலும், நாட்டின் வளங்களை வெளிநாட்டவர்களுக்கு வழங்க முடியாது. அதனால் தான் இந்த நடவடிக்கையை எடுக்கிறோம்’ என்று பதிலளித்தார்.

கூட்டரசாங்கத்தின் மேற்படி 11 கட்சிகள் ‘முழு ரட்டம ஹரி மஹட’ (முழு நாடும் சரியான பாதையில்)’ என்ற ஆவணத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் முன்மொழிவுகளின் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவளை மார்ச் 2 அன்று, வீரவன்ச தொழில்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும், மேற்படி பிரேரணைகளை வெளியிடும் நிகழ்வில் கலந்து கொண்ட கம்மன்பில எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

“1win Официальный Сайт Букмекерской Конторы Для Ставок На Спорт

1win Ставки На Спорт И Онлайн Казино Бонус 500%ContentIn...

1win Ставки На Спорт и Онлайн Казино Бонус 500%”

1win официальный Сайт Букмекерской Конторы Ставки ОнлайнContentОбзор На что...

Пинко Казино Pinko Casino Актуальное Зеркало Играть На Реальные деньги В Пинко Casino

Pinco Пинко Казино Регистрация И Доступ ко Рабочим Зеркалам"ContentПромо...

1win Casino Официальный Сайт Букмекерской Конторы, Слоты, Игровые Аппараты

1win Официальный Сайт: Ваш Проводник а Мире Современных Онлайн-ставок...