இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, டாக்டர் ஜெய்சங்கர் இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு தீவு நாடுகளின் நண்பர்களான அப்துல்லா ஷாஹித் மற்றும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் மார்ச் 26 முதல் 30 வரை இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு விஜயம் செய்கிறார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இறைவரித் திணைக்களம் வரலாற்றில் மிக உயர்ந்த வரி வருவாய் வசூலை அடைந்தது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD) இந்த ஆண்டு அதன் வரலாற்றில் மிக...

திருகோணமலை பௌத்த சிலை விவகாரம்: தர்ம சக்தி அமைப்பினர் நேரில் ஆய்வு

திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பௌத்த சிலை தொடர்பான சர்ச்சை குறித்து உண்மை நிலையை...

பட்டப்படிப்பு தொடர்பான சர்ச்சைகளுக்கு நுகேகொட பேரணியில் பதில் கிடைக்கும்: நாமல்

தனது பட்டப்படிப்பு தொடர்பாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று பாராளுமன்ற...

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள்.

பொதுமக்கள் தவிர்க்க வேண்டிய நிதி சார் நிறுவனங்கள் தொடர்பிலான பட்டியலை இலங்கை...