இந்திய வெளிவிவகார அமைச்சர்: இலங்கை வருகை!

Date:

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அடுத்த வாரம் இரண்டு நாட்கள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வரவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம், டாக்டர் ஜெய்சங்கர் மார்ச் 28 முதல் 30 வரை இங்கு இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையின்படி, டாக்டர் ஜெய்சங்கர் இலங்கை மற்றும் மாலத்தீவு ஆகிய இரு தீவு நாடுகளின் நண்பர்களான அப்துல்லா ஷாஹித் மற்றும் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் ஆகியோரின் அழைப்பின் பேரில் மார்ச் 26 முதல் 30 வரை இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கு விஜயம் செய்கிறார்.

இந்த விஜயத்தின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இந்தியாவிற்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலஞ்சம் கோரினால் 1954 துரித இலக்கத்திற்கு அழையுங்கள்

திடீர் மரண விசாரணை பரிசோதகர்கள் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கான இலஞ்சம் அல்லது...

தலவத்துகொட தீ விபத்தில் மூவர் உயிரிழப்பு!

தலவத்துகொட சந்தி அருகில் அமைந்துள்ள உணவகமொன்றில் இன்று (09) காலை இடம்பெற்ற...

இந்தோனேசிய ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை சமர்ப்பித்தார் இலங்கை தூதுவர் சஷிகலா பிரேமவர்தன!

இந்தோனேசியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள சஷிகலா பிரேமவர்தன (Sashikala Premawardhane), தனது...

சரண குணவர்தனவுக்கு கடூழிய சிறைத்தண்டனை!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு...