இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பசிலை சந்தித்தார்!

Date:

இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர். எஸ். ஜெய்சங்கர், இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துள்ளார்.

இதன்போது, இலங்கைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கு மேலும் மேலும் உதவ இந்தியா தயாராக இருப்பதாக ராஜபக்சவிடம் இந்திய உயர்ஸ்தானிகர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.

இதனையடுத்து ஜெய்சங்கர் பசில் ராஜபக்ஷவுடன் வெளிவிவகார அமைச்சர் ஜி. எல் பீரிஸைச் சந்தித்தார்.

இந்திய அரசாங்கம் 1 பில்லியன் டொலர் கடனையும், எரிபொருளை இறக்குமதி செய்ய 500 மில்லியன் டொலர் கடனையும் வழங்கியதைத் தொடர்ந்து ஜெய்சங்கரின் வருகை இதுவாகும்.

சீராக முன்னேறி வரும் இந்திய-இலங்கை பாதுகாப்பு உறவுகளும் ஜெய்சங்கரின் வருகை அதிக கவனம் செலுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் இன்று காலை சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது இலங்கையின் பொருளாதாரம் இக்கட்டான நிலையில் உள்ள வேளையில் இந்தியாவிற்கு கடன்களை வழங்குவதற்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...