‘உக்ரைன் அரசை கவிழ்க்கும் எந்தத் திட்டமும் ரஷ்யாவிற்கு இல்லை’ : ரஷ்யா

Date:

உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதனால் உக்ரைன் மீதான இந்த தாக்குதலுக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 15ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் நாட்டின் அரசை கவிழ்க்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷியாவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளரான மரியா ஸகாரோவா,
‘உக்ரைன் விவகாரத்துக்குத் தீர்வு காண்பதற்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சிறப்பு இராணுவ நடவடிக்கையின்போது, கீவ் பகுதியில் அமெரிக்க நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்பட்ட இராணுவ உயிரி ஆயுதத் திட்டத்திற்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளது.

அதேநேரம் பொதுமக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாதுகாப்பு வழித்தடம் அமைப்பது குறித்து உக்ரைன் பிரதிநிதிகளுடன் மேலும் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும்.

உக்ரைனின் தற்போதைய அரசைக் கவிழ்க்கும் நோக்கில் அங்கு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போர் உக்ரைனின் இறையாண்மைக்கோ, அந்த நாட்டு மக்களுக்கோ எதிரானது அல்ல என்பதை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

மார்ச் 01 முதல் நாடளாவிய “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” நடைமுறை

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய நடவடிக்கைத் திட்டத்திற்கு இணையாக “போதைப்பொருள் ஒழிப்பு...

துபாயில் இடம்பெற்ற ‘சட்ட சபையில் சமூக நீதி குரல்’ நூல் வெளியீட்டு விழாவும் இப்தார் நிகழ்வும் முக்கிய விருதுகளும் வழங்கி வைப்பு.

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழ்நாடு தமிமுன்...

வரி விதிப்பு: உலக நாடுகளுக்கு டிரம்ப் மிரட்டல்

எந்த நாடாவது வரி விதிப்பு விவகாரத்தில் விளையாட நினைத்தால், அந்த நாடுகளின்...

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகள்!

6 வருடங்களாக தாமதமாகிவரும் சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல...