சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதியொருவர் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாள் விஜயமாக இன்றைய தினத்தில் இலங்கை வரவுள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவையும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவையும் சந்திக்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை நெருக்கடி மற்றும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவேண்டிய பொருளாதார நடவடிக்கைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக நிதி அமைச்சர் பசிஸ் ராஜபக்ஷ விரைவில் அமெரிக்க செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய எதிர்காலத்தில் கடன் உதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் அடங்கிய யோசனைத் திட்டமொன்றையும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இதன்போது சமர்ப்பிக்கவுள்ளனர்.
இதன்போது அவர் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.