சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதற்காக விசேட குழு நியமனம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தை (IMF) கையாள்வதற்காக சர்வதேச சட்ட நிறுவனம் ஒன்றை தெரிவு செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த குழுவில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆர்ட்டிகல ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ சர்வதேச நாணய நிதியத்துடன் உடன் கலந்துரையாடுவதற்காக ஏப்ரல் நடுப்பகுதியில் வொஷிங்டனுக்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா உடல் நலக்குறைவால் காலமானார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா உடல்நலக்குறைவு காரணமாக இன்று...

சதொச நிறுவனத்தினால் 18 அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனத்தினால் 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களின்...