சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

Date:

சவுதி அரேபியாவில் நேற்றையதினம் ஒரே நாளில் அதிகபட்சமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்தது.

அதற்கமைய சவூதி அரேபியாவைச் சேர்ந்த 73 பேரும் யெமன் நாட்டைச் சேர்ந்த, 7 பேரும் சிரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உள்ளடங்களாக மொத்தம் 81 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவூதி அரேபியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாக கூறுகிறது.

அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கொய்தா மற்றும் ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களின் உறுப்பினர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முன்னதாக சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு 69 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு 81 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனைக்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். மரண தண்டனைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்து வரும் போதிலும், பயங்கரவாதம் உள்ளிட்ட மோசமான குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை சரி என்றே மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்தச் சூழலில் சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகமாகும்.

சவூதியின் முக்கியமான பொருளாதார மையங்கள் மீது தாக்குதல்களைத் திட்டமிட்டவர்கள். சிலர் சவூதி பாதுகாப்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டவர்கள்.

சிலர் சட்ட விரோதமான ஆயுதங்களை நாட்டிற்குள் கடத்தினார்கள். இதுபோன்ற மோசமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது என்று சவூதி அரசு தெரிவிக்கின்றது.

சர்வதேச அளவில் அதிகம் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக சவூதி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...